search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சி வகுப்பு"

    • லோதியை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • இளைஞரின் மரணத்திற்கான சரியான காரணம் விசாரணையில் உள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மாநில சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த மாணவர் ஒருவர் பயிற்சி வகுப்பின் இடையே திடீரென சரிந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    மத்தியப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணையம் (MPPSC) தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த 20 வயது மாணவர், சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா லோதி என்று அடையாளம் காணப்பட்டார்.

    சிசிடிவி காட்சியின்படி, லோதி வகுப்பறையில் நிமிர்ந்து உட்கார்ந்து படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார். 

    அப்போது அவர் திடீரென மார்பைப் பற்றிக் கொண்டு சில நொடிகளில் நாற்காலியில் இருந்து சரிந்து விழுந்தது சிசிடிவி காட்சி காட்டுகிறது.

    அதிர்ச்சியடைந்த சக மாணவரகள் லோதியை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    லோதியின் மரணம் சமீபத்தில் இந்தூரில் நடந்த நான்காவது சம்பவம் ஆகும். இது இளைஞர்கள் மத்தியில் "அமைதியான மாரடைப்பு" ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைப் பற்றிய கவலையைத் தூண்டுகிறது.

    இருப்பினும், இளைஞரின் மரணத்திற்கான சரியான காரணம் விசாரணையில் உள்ளது.

    • எதிர் அணிக்கு பதிலடி கொடுப்பது, தி.மு.க.வின் செயல்திட்டங்களை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
    • 100 ஓட்டுகளுக்கு ஒருவர் வீதம் நியமித்து பணியாற்ற சொல்லி உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர் பார்க்கப்படுவதால், ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் இறங்கி பணியாற்றி வருகின்றனர்.

    அந்த வகையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற இருக்கும் முகவர்களின் கூட்டம் தொகுதி வாரியாக நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. 100 ஓட்டுகளுக்கு ஒருவர் வீதம் நியமித்து பணியாற்ற சொல்லி உள்ளனர்.

    இதேபோல் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியினர் கட்சியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் உடனுக்குடன் கட்சி நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

    எதிர் அணிக்கு பதிலடி கொடுப்பது, தி.மு.க.வின் செயல்திட்டங்களை முன்னெடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இப்போது மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்புகளை நடத்த ஏற்பாடு நடந்து வருகிறது.

    இது குறித்து தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னெடுப்பில் வருகிற 13-ந்தேதி (சனிக்கிழமை) மாவட்ட கழகங்கள் நடத்தும் மாவட்ட அளவிலான "சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு" நடைபெறுகிறது.

    இப்பயிற்சி வகுப்பில் தி.மு.க. இளைஞர் அணி, மாணவர் அணவி, மகளிர் அணி, தொண்டர் அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, பொறியாளர் அணி, மருத்துவ அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, சிறுபான்மை நல உரிமைப் பிரிவு, விவசாய அணி, விவசாயத் தொழிலாளர் அணி, சுற்றுச்சூழல் அணி, அயலக அணி உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பட்டதாரி ஆசிரியர் 2,222 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் 25-ந் தேதி வெளியிடப்பட்டது.
    • மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2023-ம் ஆண்டு திட்ட நிரலின்படி, பட்டதாரி ஆசிரியர் 2,222 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் 25-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற 30-ந் தேதியாகும்.

    இந்த தேர்வுக்கான இலவச இணையவழி பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலமாக வருகிற 27-ந் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்த போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவசப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற தங்களது சுய விவரத்தை https://forms.gle/gsZtU6Quse6iG71XA என்ற லிங்க்கில் முன்பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0421 2999152, 94990 55944 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • ஆசிரியர்களுக்கு திட்டம் குறித்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பள்ளி தலைமை மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பினை மாவட்ட கலெக்டர் மகாபாரதி குத்துவிளக்கு ஏற்றிவைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெப்) நிறுவனத்துடன் இணைந்து பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம் என்கிற திட்டத்தினை கடந்த 2022 - 2023 ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

    தமிழக முதல்வர், செப்டம்பர் 16-2022 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்ட பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டமானது, பள்ளிக்கல்வி துறையின் முழு ஒத்துழை ப்புடன் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்ப ள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு (2022-23) இத்திட்டமானது தமிழ்நாட்டில் 38 மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் 4356 மேல்நிலைப் பள்ளிகளில் சிறப்பாக செயல்படுத்த ப்பட்டது.

    சுமார் 4.78 லட்சம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திட்டம் குறித்து விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

    இந்த செயல்பாடுகளினால் மாணவர்களிடையே தலைமைத்துவம் மற்றும் பிரச்சனைகளைகையாளுதல், பிரச்சனைகளுக்கு புத்தாக தீர்வு காணுதல் உட்பட 21-ம் நூற்றாண்டு திறன்கள் உருவாக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மகாபாரதி தெரிவித்தார்.

    இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட கல்வி அலுவலர் ஞானசங்கர், பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜ்கமல் மற்றும் பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பள்ளி முதல்வர் ராமலிங்கம் வரவேற்றார்.

    • கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
    • அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பில் காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட வன அலுவலர் கலாநிதி, மாநில காலநிலை மாற்ற இயக்க உதவி திட்ட இயக்குநர் மனிஷ் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தார்.

    பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாகி வெற்றிச்செல்வன் ,அண்ணா பல்கலை கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பேராசிரியர் கீதா, தோட்டக்கலை துணை இயக்குநர் லதா மகேஷ், சுரில், பிரபாகரன் ஆகியோர் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு ஈரநில இயக்கத்தின் பங்கு, தோல்கழிவு மற்றும் திடக்கழிவு கையாள்வது ஆகியவை குறித்து விரிவாக பேசினர்.

    பின்னர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் மரக்கன்றுகள் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி உள்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.
    • இப்பயிற்சி சேர விருப்பமுள்ளவர்கள் கூகுள் பார்மில் பதிவு செய்து கொள்ளலாம்.

    கிருஷ்ணகிரி,  

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி முதல் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    இது குறித்து மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு, வங்கி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது, தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரிய ஆண்டு திட்ட நிரலில், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தோராயமாக 6,553 காலிபணியிடங்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தோராயமாக 3,587 காலிபணியிடங்கள் தேர்வு நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

    அதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.

    இப்பயிற்சி சேர விருப்பமுள்ளவர்கள் கூகுள் பார்மில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04343 291983 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தகுதி வாய்ந்த நபர்கள், ஆசிரியர் தகுதி தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.
    • தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள், தற்போது நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.

    தன்னார்வ பயிலும் வட்டத்தில் படித்த மாணவர்கள், தற்போது நடந்து முடிந்த டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 முதன்மை தேர்வு எழுதியுள்ளனர். குரூப் 4 தேர்வில் 17 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாகியுள்ளனர்.

    மேலும், 2022-ல், சீருடைப்பணியாளர்கள் எஸ்.ஐ., தேர்வில் 5 பேர், போலீஸ் தேர்வில் 17 பேர் என, மொத்தம் 22 பேர் தேர்ச்சி பெற்று, தற்போது பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள, டி.என்.பி.எஸ்.சி, குரூப் 1, 2, 4 தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா தலைமை வகித்து வகுப்பை தொடங்கி வைத்தார்.

    இப்பயிற்சி வகுப்பில், மாவட்டம் முழுவதும் இருந்து, 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப் பித்திருந்தனர். முதல் நாளான நேற்று 73 பேர் கலந்து கொண்டனர்.

    இது குறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா கூறியதாவது:

    டி.என்.பி.எஸ்.சி, குரூப் 1, 2, 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தற்போது தொடங்கி உள்ளது. 6 மாதத்துக்கு தொடர்ந்து இப்பயிற்சி வகுப்பு நடைபெறும்.

    இந்த இலவச நேரடி பயிற்சி வகுப்பு, தினமும் காலை 10.30 முதல், மதியம் 1.30 மணி வரை நடக்கும். ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுனர்களைக் கொண்டு இப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    வாரம் தோறும், செவ்வாய், வெள்ளிக் கிழமை மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். தினமும், பயிற்சி தாள் வழங்கப்படும். இவற்றை சிறந்த முறையில் பயன்படுத்தி பயிற்சி செய்தால், போட்டித் தேர்வில் வெற்றி பெறலாம் என கூறினார். 

    • 10 ஒன்றியங்களில் இப்பயிற்சி வகுப்பு நடந்தது.
    • குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்து தொடர்ந்து பள்ளி கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    கிருஷ்ணகிரி,

    மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 413 ஒன்றியத்தில் உள்ள அனைத்து குறுவள மையங்களில், 1 முதல் 3-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, உடல் நலம், ஆரோக்கியம், மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிதல் உள்ளடங்கிய கல்வி குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது.

    அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி உத்தரவின்பேரில், 10 ஒன்றியங்களில் இப்பயிற்சி வகுப்பு நடந்தது.

    கிருஷ்ணகிரி ஜாகீர் வெங்கடாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பை குறுவளமைய மேற்பார்வையாளர் அசோக், வட்டார கல்வி அலுவலர்கள் செல்வராஜ், சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சிறப்பு பயிற்றுனர் அருண்குமார், மாற்றுத்திறன் மாணவர்களை கண்டறிதல், உள்ளடங்கிய கல்வி, தேர்வு சலுகைகள், அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து பேசினார்.

    இந்த பயிற்சியில், மனநலம், உடல் நலம், ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மாணவர்கள் கற்றல் தொடர்பாக முன்னேற்றம் ஏற்படும். ஆப் மூலமாக 23 கேள்விகள் கேட்கப்பட்டு மாணவர்கள் நலனில் அக்கரை செலுத்தி குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்து தொடர்ந்து பள்ளி கற்றல் செயல்பாடுகளில் ஈடுபட செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாணவர்கள் சரியான நேரத்தில் உறங்க வேண்டும். அதிக நேரம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தக்கூடாது.

    பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். பூச்சி கொல்லி பயன்படுத்திய பழங்கள், காய்கறிகளை தவிர்க்க வேண்டும். சரிவிகித உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். உடல் நலம், மன நலம், ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே சக மாணர்கள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளி வகுப்பறை சூழலில் நன்றாக படித்து சாதனையாளராக முடியும் என்று அறிவுத்தப்பட்டது.

    • சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
    • அடுத்ததாக போலீஸ் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்படும் நிலையில் அத்தேர்விற்கான பயிற்சியும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

    தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் காவல்துறையில் காலியாக உள்ள 750 சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்) மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒர் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 1-7-2023 அன்று 20 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

    இத்தேர்விற்கு வருகிற 30-ந் தேதி வரை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வானது ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது. தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக மேற்கண்ட சீருடை பணியாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.

    அடுத்ததாக போலீஸ் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்படும் நிலையில் அத்தேர்விற்கான பயிற்சியும் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. மேலும் ஏற்கனவே பயிற்சி பெற்ற மாணவர்கள் தயாராகும் வகையில் தனித்தேர்வு பயிற்சி வகுப்புகள், தனியே நாளை (திங்கள்கிழமை) முதல் நடத்தபட உள்ளது.

    எனவே இப்பயிற்சி வகுப்பில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை பணிக்குத் தயாராகும் இளைஞர்கள் பயிற்சி வகுப்பின் பெயர், தங்களது பெயர் மற்றும் கல்வித் தகுதியினை குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் தகவல் அனுப்பி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் 04362-237037 என்ற அலுவலக தொலைபேசி எண்ணி லும்தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விருதுநகரில் அரசு போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • நல்ல முறையில் பயிற்சி பெற்று வெற்றியடைய வேண்டும் என்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நூலக அலுவலக கூட்ட ரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒருங்கி ணைந்த ஒன்றிய அரசுப் பணிக்கான போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடந்தது. இதனை கலெக்டர் ஜெயசீலன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில், இந்த பயிற்சி வகுப்பானது, விருதுநகர் மாவட்ட நூலக அலுவலத்திலும், சிவகாசி அரசு கலை அறிவியல் கல்லூரியிலும் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி வகுப்பில் சுமார் 170 போட்டித்தேர்வு ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்களை எளிய முறையில் போட்டி தேர்வை எப்படி அனுகுவது, விடா முயற்சி, போட்டி தேர்வில் வெற்றி பெறுவதற்கான நுணுக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளையும், போட்டி தேர்வு குறித்து அவரது அனுபகங்களுடன் கூடிய ஊக்க உரைகளை வழங்கினர். எனவே தமிழக அரசு வழங்கும் இந்த திட்டத்தினை பயன்படுத்தி, நல்ல முறையில் பயிற்சி பெற்று வெற்றியடைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் ஞானபிரபா, பிரியதர்சினி (தொழில்நெறி வழிகாட்டி), மாவட்ட நூலக அலுவலர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்களை கையாளும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது.
    • ஒருங்கிணைத்து கற்றல் உபகரணங்களை உருவாக்கி மாணவர்களின் கற்றலை மேம்படுத்திட வேண்டும்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியத்தில் உள்ள 177 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரியின் உத்தரவின் பேரில் 4,5-ம் வகுப்பு மாணவர்களை கையாளும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் நடைபெற்று வருகிறது.

    இதன் முதற்கட்ட தொடக்கமாக சூளகிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் சூளகிரி ஒன்றியத்தை சேர்ந்த தொடக்க, நடுநிலை பள்ளியை சேர்ந்த 240 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு ஆகிய பாடங்களில் மாணவர்களின் கற்றல் திறனை புரிதலோடு மேம்படுத்தும் வகையில் செயல்பாடுகளை வடிவமைத்து பயிற்சியினை வழங்கி வருகின்றனர்.

    பயிற்சியினை ஒசூர் மாவட்டக் கல்வி அலுவலர் முனிராஜ், சூளகிரி வட்டாரக் கல்வி அலுவலர்கள் மாதேஷ், வெங்கட் குமார், ஜார்ஜ், இந்திரா ஆகியோர் பார்வையிட்டு பாட புத்தகம், பயிற்சி புத்தகம், ஆசிரியர் கையேடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து கற்றல் உபகரணங்களை உருவாக்கி மாணவர்களின் கற்றலை மேம்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தினர். பயிற்சிக்கான ஏற்பாட்டை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சண்முக பிரியா செய்து வருகிறார். இதில் பொருப்பாளர் வெங்கடேசன், ஆசிரியர் பயிற்றுனர் வைத்தியநாதன், வெங்கடேஷ், குமார், சங்கரன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடு பயிற்சி வகுப்புகள் 4-ந் தேதி தொடங்குகிறது.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்  கோ.ஜினு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் தொடர்பான பயிற்சி வகுப்பு சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வருகிற 4-ந் தேதி முதல் நடைபெறுகிறது. வாரத்திற்கு இரண்டு நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு) என மொத்தம் 17 நாட்கள் (100மணி நேரம்) பயிற்சி வகுப்பு நடைபெறும். 

    பயிற்சி கட்டணம் ரூ.4 ஆயிரத்து 543 ஆகும். பயிற்சியின் முடிவில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் சான்றிதழ் வழங்கப்படும். இச்சான்றிதழை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே பயிற்சியினை முடித்தவர்கள் அரசு வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றில் நகை மதிப்பீட்டாளாராக பணியில் உள்ளனர். 

    பயிற்சியில் சேர குறைந்த பட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. ஆண், பெண் இருபாலரும் எந்த பகுதியில் இருந்தும் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு, சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை அணுகவும். மேலும் தொடர்ப்புக்கு 04575 - 243995, 79048 70745 மற்றும் 9786750554 ஆகிய தொலைபேசி எண்களிலும்   தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×